Monday, September 10, 2012

இசையும் அடிவருடிகளும் ( 3 )

http://amudhavan.blogspot.in/2012/07/blog-post_28.html#comment-form

எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் ஒருமுறை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது...


"நான் ஏன் சமூக சீர்திருத்தங்களைப்பற்றி எழுதுவதில்லை அப்படின்னு கேட்கறாங்க. நானும் எழுத வந்தபுதிதில் இந்த உலகை மாற்றியமைக்க வேண்டும். புரட்டி போடவேண்டும் திருத்தியமைக்க வேண்டும் அப்படின்னு நினைச்சது உண்டு.. போக போக புரிந்துகொண்டேன், இங்கே ஒரு மண்புழுவைக்கூட திருத்தமுடியாது என்பதை... "

- என்று நகைச்சுவையாக சொல்லியிருந்தார். ஆனால் அந்த நகைச்சுவையில் எவ்வளவு ஆழமும் அழுத்தமும் இருந்தது என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

தமழ் மக்கட்தொகையில் பத்து சதவிகிதம் இணையம் உபயோகிப்பவர்கள் இருக்கலாம். அதில் பத்து சதவிகிதத்தினர் ப்ளாக் படிப்பவர்கள். அதற்குப்பின் எழுதுபவர்கள் என்று கணக்கு எடுத்தால் ஒரு ஆயிரம் பேர் மிஞ்சுவார்கள். இதில் இளையராஜாவை தூக்கிப்பிடிக்க, ரஹ்மானை தூக்கிபிடிக்க, எம்.எஸ்.வியை தூக்கிபிடிக்க, என்று ஆளாளுக்கு ஒருவரை தூக்கிப்பிடித்துகொண்டுதான் இருப்பார்கள். இதில் யார் யாரை மாற்றப் போகிறார்கள்... எதற்காக மாற்றவேண்டும்...

- என்பதான கேள்விகள் என் மனதில் எழுந்தாலும் திரு.காரிகன் சொன்னதுபோல் நல்ல தமிழ் எழுத்துக்களைப் படிக்கும் ஒரு இடமாகவே இத்தளங்களைப் பார்க்கிறேன்...

மற்றபடி எனக்கான நல்ல இசை என்பது என் மனதைப் பொறுத்த விஷயம் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

கே.வி.எம்மின் இசை ஒரு விதத்திலும் எம்.எஸ்.வியின் இசை ஒருவிதத்திலும், இளையராஜாவின் இசை ஒருவிதத்திலும், ரஹ்மானின் இசை ஒருவிதத்திலும் என் மனதை வருடியிருக்கிறது. இதில் விட்டுப்போன என் அபிமானத்துக்குரிய திரு.எ.எம்.ராஜாவின் இசை... :) மறக்கவே முடியாத அனுபவம் அது.

இங்கே நான் இப்பொழுது பதிவு செய்ய நினைத்த செய்தி என்னவென்றால், இவர்களைத்தவிரவும், கடந்த காலங்களிலும் நிகழ்காலங்களிலும் பலப்பல இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். ஆனால் அவர்களைப்பற்றிஎல்லாம் நாம் விவாதிப்பதேயில்லை. ஒருபாடல் செய்தார்களோ ஓராயிரம் பாடல் செய்தார்களோ... எண்ணிக்கை இங்கு கணக்காகாது. ஒரு பிள்ளை மட்டுமே பெற்ற தாய் ஏழு பிள்ளை பெற்றவளைவிட எந்த விதத்திலும் குறைந்துபோவதில்லை. ஆனால் அத்தகைய மற்ற இசையமைப்பாளர்களை எல்லாம் விட்டுவிட்டு இந்த நான்கைந்து பேர்களை மட்டுமே விவாதிக்கிறோமே.. அது ஏன்..?

ஏனென்றால் இவர்கள் அனைவரும் சாதித்தவர்கள் - அதனால்தான்; இவர்கள் trend setters. - அதனால்தான்; எந்தவொரு இசையமைப்பாளருக்கும் அவருடைய பிரான்ட் இசையை நிலைநாட்ட வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் வென்றது இவர்கள் மட்டும்தான்.

வாழ்த்திவிட்டு போவோமே... என்ன பிரச்னை...?

இதுவே வேறு எந்த நாட்டவர்களாக இருந்திருந்தாலும் இத்தனை மேதைகள் தங்களுடன் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கூரை ஏறி கூவியிருபார்கள்... என்ன செய்வது.. நாம் தமிழர்களாயிற்றே... மேலே ஏற முயற்சி செய்பவர்களின் காலைபிடித்து கீழே இழுத்து எல்லோரும் சேர்ந்து குழியில் விழுவதுதான் நம் குலவழக்கம்... கலாச்சாரம்... மாற்ற முடியுமா என்ன...?

யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்...

திரு காரிகன் அவர்களே... எந்த காரணத்திற்காகவும் நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நன்றி...

Wednesday, September 5, 2012

இசையும் அடிவருடிகளும் ( 2 )


http://amudhavan.blogspot.in/2012/07/blog-post_28.html#comment-form

திரு காரிகன்,


// எம் எஸ் வி போல யாரும் இங்கே கிடையாது என்று அமுதவன் சொன்னால் நீங்கள் அவரை அடிவருடி என்று விமர்சிக்கலாம். //

- இதற்கு திரு.அமுதவனுக்கு பதிலளிக்கும்போதே நான் சொல்லிவிட்டேன்.

// எம் எஸ் வி க்கு பிறகுதான் இளையராஜா வருகிறார், இருக்கிறார், இருப்பார். அவரை தாண்டி சொல்லும் மேன்மையான இசைதிறன் இளையராஜாவிடம் இல்லை என்பது அவருக்கே தெரியும் //

- அப்படியா...?

// எப்படி இளையராஜாவுக்கு பின் ரகுமானோ(இதை மட்டும் ஒத்துக்கொள்ள மறுக்க மாட்டீர்கள்) //

- மன்னிக்கவும். நான் யாருக்கு பின்னேயும் யாரையும் இருத்திப பார்ப்பதில்லை... எனக்கு இசை முறைபடிஎல்லாம் தெரியாது. தெரிந்தவரை, எம்.எஸ்.வியின் சப்தம் வேறு, இளையராஜாவின் சப்தம் வேறு, எ.ஆர்.ரஹ்மானின் சப்தம் வேறு. யார் முன்னே யார் பின்னே என்று பார்க்க எனக்கு தேவையே இல்லை. அவரவர் சப்தங்கள் எந்த இடங்களில் என் மனதை வருடுகிறதோ, ஒரு நன்றியை சொல்லிவிட்டு புன்னகைத்துக்கொள்வேன்.

// திரு அமுதவன் எம் எஸ் வி யை கடவுள் அளவுக்கு புகழ்வதாக நீங்கள் சொல்வது ஒரு தேவை இல்லாத விவாதத்திற்கு பாதை போடுகிறது //

- தேவை இல்லாத...? - அப்படியானால் அந்த விவாதத்தை தவிர்த்துவிடுவோம்... :)

// நானும் கூட இளையராஜாவின் சிறந்த பல பாடல்களை இன்றுவரை விரும்பி கேட்பவன்தான்.ஆனால் என்னால் இளையராஜா என்றால் இசை என்றும் அவரே தமிழிசையின் பிதாமகன் என்றும் கண்டிப்பாக பிதற்ற முடியாது //

- மிக உண்மை...

// இணையத்தில் இளையராஜாவை பற்றி எழுதும் பலபேர் சொல்லும் ஒரு cliche ராஜா ராஜாதான் என்பது.பின்னர் அவரின் இசை உயிரை உருக்கும் மனதை என்னமோ செய்யும் என்று வார்த்தைகள் இன்றி குழப்பமாக எழுதவதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள்.பொதுவாக அவர்கள் இசையை பற்றிய ஒரு விஸ்தாரமான சிந்தனை கிடையாது. டி சௌந்தர் என்னும் ஒரு மிக அருமையான இசை விமர்சகர் எல்லா இசை அமைப்பாளர்களைப்பற்றி விரிவாக எழுதிக்கொண்டு வந்து கடைசியில் இளையராஜாவோடு நின்றுவிடுகிறார்.எ ஆர் ரகுமானை காப்பி என்று ஒரே வார்த்தையில் புதைத்து விடுகிறார். இன்னும் ஒரு இளையராஜா அபிமானி(மதிமாறன் என்பவர்) சின்ன சின்ன ஆசை என்ற பாடலை விட மணியே மணிக்குயிலே என்னும் இளையராஜாவின் பாடல் வெகுவாக சிறந்தது என்றும் சின்ன சின்ன ஆசையை விரும்பிய எல்லா காதுகளும் முட்டாள் காதுகள் என்று அடைமொழி இடுகிறார்.இன்னொருவர் இளையராஜாதான் தமிழ் இசையில் பாடலுக்கு முன் இசை பாடலுக்கு இடையே இசை என்று ஒரு புதிய வடிவத்தையே புகுத்தினார் என்று வாய்கூசாமல் மைக் இல்லாமல் கூப்பாடு போடுகிறார்.இவர்களைத்தான் நான் அடிவருடிகள் என்று சொல்கிறேன்.//

- ம்ம்ம்ம்... இளையராஜாவின் ரசிகர்களுடைய ஆர்வக்கோளாறின் காரணமாக அநியாயமாக ராஜாவின் இசை அசிங்கப்படுவது வருத்தமாக இருக்கிறது. கவலையாகவும் இருக்கிறது.