Thursday, August 26, 2010

தெரிவதில்லை...

தினம் தினம் பார்ப்பதுதான்
என் முகத்தை...

தலைவாரும் போதும்
முகம்துடைக்கும் போதும்
சவரம்செய்யும் போதும்

தினம் தினம் பார்ப்பதுதான்
என் உடலை...


உடற்பயிற்சி செய்யும்போதும்
குளிக்கும் போதும்
உடைமாற்றும் போதும்

ஆனாலும் தெரிவதில்லை...
என்னடா கருத்துட்டே
என்னடா இளைச்சுட்டே
என்று அம்மாவும் நண்பரும்
கேட்கும்வரை...


1 comment:

  1. மிகவும் நன்ராக இருகிரது

    ReplyDelete