தொப்புழ்க்கொடி யறுத்த
தாயி னுறவு
தோளில்வைத்து தாங்கிய
தந்தையி னுறவு
ஒவ்வொரு பிறந்தநாளையும்
ஒவ்வொரு விதமாய்
சிரித்துக்கொண்டே நினைவூட்டிய
சகோதர னுறவு
செல்லசண்டையில் சிணுங்கிய
சகோதரியி னுறவு
தளர்கைகளால் கன்னம்வழித்து
கதைகள் பலகூறி
கற்பனைகள் வளர்த்த
பாட்டியி னுறவு
வெள்ளியாறு போல
வெண்ணிலாவை வீட்டினுள்
வரவழைத்துத் தந்த
ஜன்னல்கம்பியி னுறவு
தினமொரு சிநேகம்
தேடித் தந்த
கொல்லைரோஜாவி னுறவு
வேகவைத்த வெய்யிலின்
வெப்பம் தணித்த
வேப்பமரத்தி னுறவு
வம்புபேசி வாயளந்த
அடுத்த வீட்டு
வனிதா அக்காவினுறவு
மழலை கொஞ்சி
முத்தத்தில் முகம் நனைத்த
அவள் குழந்தயினுறவு
குட்டியாகவே இருந்துவிடாதா
என்று ஏங்கவைத்த
கண்மருண்ட கன்றினுறவு
எல்லாவற்றையும் கட்டிபோட்டு
இழுத்துவந்துவிட்டேன் இவளை
ஒரு முழத்தில் -
நான்கட்டிய தாலிக் கயிறு...
புரிந்து கொள்ள...... சற்று நேரம் ஆனது.......
ReplyDeleteஒவ்வொரு ஆணும் இதைப் புரிந்து கொண்டால் போதும் !
ReplyDeleteஇப்போது தமிழில் தட்டச்சு செய்வது சுலபமாகிவிட்டது....
ReplyDeleteப்ரியா = மிக்க நன்றி. உங்கள் பாராட்டு கருத்துக்கானது என்று நினைக்கிறேமன். கவிதை(?)க்கு...? இன்னும் நிறைய எழுதவேண்டும், கவிதைதான் என்று சொல்லிக்கொள்ள.... இல்லையா...!!!
ReplyDeleteஅருமை மிக்க அருமை
ReplyDelete