Wednesday, July 28, 2010

கண்டதும் கொண்டதும்

காதல் கண்டேன் -
கவிதை வந்தது!
கலவி கண்டேன் -
காமம் வந்தது!

காசுபணம் கண்டேன்-
கர்வம் வந்தது!
காலம் கண்டேன்-
கவலை வந்தது!

கல்வி கண்டேன்-
அறிவு வந்தது!
அறிவு கண்டேன்-
கேள்விகள் வந்தது!

கேள்விகள் கண்டேன்-
கருத்து வந்தது!
கருத்து கண்டேன்-
குழப்பம் வந்தது!

குழப்பம் கண்டேன்-
தெளிவு வந்தது!
கண்டதெல்லாம் துறந்தேன்-
ஞானம் வந்தது...!

1 comment:

  1. நன்முயற்சி!! வாழ்வின் உண்மையை வெகு எளிதாக உணர்த்தியது கவிதை

    ReplyDelete